மட்டக்களப்பு நகரில் முச்சக்கர வண்டிகள் மோதி விபத்து
மட்டக்களப்பு நகரில் நேற்று பிற்பகல் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் மட்டக்களப்பு வாவி க்கரை வீதியிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். களுதாவளைக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும் திருப்பெருந்துறையில் இருந்து மட்டக்களப்பு வந்த முச்சக்கர வண்டியுமே இதன்போது மோதிக்கொண்டுள்ளன. இதன்போது ஒரு முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன்போது ஸ்தலத்துக்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு முச்சக்கர வண்டிகளையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றனர்.