மட்­டக்­க­ளப்பு நகரில் முச்­சக்­கர வண்­டிகள் மோதி விபத்து

மட்­டக்­க­ளப்பு நகரில் நேற்று பிற்­பகல் இரண்டு முச்­சக்­கர வண்­டிகள் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் ஒருவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். நேற்று பிற்­பகல் மட்­டக்­க­ளப்பு வாவி க்­கரை வீதி­யி­லேயே இந்த விபத்து சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு பொலிஸார் தெரிவித்­தனர். களு­தா­வ­ளைக்கு சென்­று­கொண்­டி­ருந்த முச்­சக்­கர வண்­டியும் திருப்­பெ­ருந்­து­றையில் இருந்து மட்­டக்­க­ளப்பு வந்த முச்­சக்­கர வண்­டி­யுமே இதன்­போது மோதிக்­கொண்­டுள்­ளன. இதன்­போது ஒரு முச்­சக்­கரவண்டிச் சாரதி படு­கா­ய­ம­டைந்து மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.இதன்­போது ஸ்தலத்­துக்கு விரைந்த மட்­டக்­க­ளப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு முச்சக்கர வண்டிகளையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றனர்.