1987, 1991ம் ஆண்டுகளில் இடம்பெற்ற வன்செயல் காரணமாக மகிழடித்தீவு கிராமத்தில் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 25,26ம் திகதிகளில் மகிழடித்தீவு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இவ் உதைபந்தாட்ட போட்டியில் 25 ற்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இறுதிப்போட்டியில் மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும் களமாடி கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணி வெற்றியீட்டி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
இதன்போது முதல் மூன்று இடங்களை பெற்ற கழகங்களுக்கும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதைபந்தாட்ட போட்டியில் 25 ற்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இறுதிப்போட்டியில் மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும் களமாடி கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணி வெற்றியீட்டி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
இதன்போது முதல் மூன்று இடங்களை பெற்ற கழகங்களுக்கும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.