வரலாற்று சிறப்புமிகு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் சற்று நேரத்திற்கு முன்பு (வீடியோ)

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக திகழ்கின்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி தீர்த்தோற்சம் எதிர்வரும் சனிக்கிழமை(01) அதிகாலை 06.00மணிக்கு இடம்பெற்று மகோற்சம் நிறைவு காணவிருக்கின்றது.


கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்வமானது தொடர்ச்சியாக திருவிழாக்கள் இடம்பெற்று இன்று(29) மண்டபத்தடி,கன்னங்குடா, குறிஞ்சாமுனை போன்ற கிராமங்களின் திருவிழாவும் நாளை(30) கொக்கட்டிச்சோலை கிராம மக்களின் திருவிழாவும் வெள்ளிக்கிழமை(31) முனைக்காடு கிராம மக்களின் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.