சுவீஸ் உதயம் அமைப்பினால் நிதி உதவி


(சா.நடனசபேசன்)

பட்டிருப்பக் கல்வி வலயத்திற்குட்பட்ட மண்டூர் 14 அரசினர் தமிழக்  கலவன் பாடசாலையில் 5 வருடங்களாக  சாதனைபடைத்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிப்பதற்கான பரிசுப்பொருட்கள் கொள்வனவுசெய்வதற்காக சுவீஸ் உதயம் அமைப்பு நிதி உதவி வழங்கியுள்ளது.

விளையாட்டுப்போட்டி ,தமிழ்மொழித்தினம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அடங்கலாக சாதனை படைத்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கவுள்ளனர்
இதற்காக அப் பாடசாலைக்குச் சென்ற சுவீஸ உதயம் அமைப்பின் செயலாளரும் சமூகசேவையாளருமான வே.ஜெயக்குமார் சுவீஸ்உதயத்தின் கிழக்குமாகாணக் கிளைத்தலைவர் மு.விமலநாதன் பிரதித்தலைவர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் அப் பாடசாலைக்குச் சென்று அதிபர் எஸ்.புஸ்பராசாவைச்சந்தித்து அதற்கான ஒழுங்கைச் செய்துள்ளனர்