பிரான்ஸ் மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா

0
( Battinews - France ) பிரான்சின் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள மாணிக்க பிள்ளையார் ஆலயவருடாந்த தேர் திருவிழா 30.08.2015 இன்று   ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெரும்திரளான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து இருந்தது.

இவ்விழாவில் பல்லினமக்களும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர். அத்துடன் லாச்சப்பல் பகுதியில் அமைந்திருந்த சகல வியாபார ஸ்தாபனங்களும் இவ் விழாவில் கலந்துகொண்ட சகல மக்களுக்கும் உணவு மற்றும் குளிர்பானங்களும் வழங்கி சிறப்பித்தனர்.

இவ் விழாவில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாடுமீன் அபிவிருத்தி சங்கம் லாச்சப்பல் பகுதியில் பொது மக்களுக்காக தாகசாந்தி நிலையம் ஒன்றை நிறுவி மோர் மற்றும் அன்னனதனம் கொடுத்து சிறப்பித்திருந்தமையானது வரவேற்க வேண்டிய விடயமாகும்.

இவ்வாறான முயற்சிகளில் புலம்பெயர் தேசங்களில் உள்ள எமக்குரிய சங்கங்கள் ஈடுபடுவார்களாயின் அவர்களுக்கும் இது ஒரு புதிய மாற்றமாக இருக்கும்