(ஷமி.மண்டூர்) வெல்லாவெளிப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தைச் சேந்த இளையதம்பி-வைரமுத்து (62)வயதுடைய குடும்பஸ்தர் பாம்பு தீண்டி சிகிச்சை பெற்று வந்த நிலையில் (1) செவ்வாய் அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம்பற்றி தெரியவருவதாவது இரண்டு குழந்தையின் தந்தையான இளையதம்பி-வைரமுத்து என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுத்தோட்ட வளாகத்தில்வைத்து பாம்பு தீண்டிய போது விஷகடி வைத்தியரிடம் சிகிச்சைபெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.