உணவு உற்பத்தி சம்பந்தமான தேசிய வேலைத்திட்ட அங்குரார்ப்பண வைபவம் கருங்காலிச்சோலையில்

(ஜெ.ஜெய்ஷிகன்)

உணவு உற்பத்தி சம்பந்தமான தேசிய வேலைத்திட்டம் நாடு பூராகவும் இன்று திங்கட்கிழமை (05.10.2015) சம்பிரதாயபூர்வமாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனையொட்டிய நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பேத்தாழையில் நடைபெற்றது. உணவு உற்பத்தி செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடாத்திக் கொண்டிருக்கும் ஈவேரா என்ற பயனாளியின் தோட்டத்தில் அறுவடை விழாவும் மரநடுகையும் இன்று நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஸ், பாராளுமன்ற உறுப்பினர் திரு.சீ.யோகேஸ்வரன், பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.பிரணவஜோதி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.சசிகுமார்  பிரதேச சபையின் செயலாளர் ஜனாப்.சிஹாப்தீன்,கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக்க, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் முஹமட் றியாஸ், கிராம உத்தியோகத்தர் எம்.குணபாலன் மற்றும் பொது மக்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டதைப் படங்களில் காண்க.