கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ மோதுண்டு விபத்து

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதானவீதியில்  மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ என்பன மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவம் இன்று(24) செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்;கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் கனரக வாகனமொன்றை முந்திச்சென்ற போது இன்னோர் மோட்டார் சைக்கிலில் மோதுண்டுள்ளது. அதேநேரத்தில் பின்வந்த ஆட்டோவும் குறித்த மோட்டார் சைக்கலில் மீண்டும் மோதியுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.