முதியோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

(ஜெ.ஜெய்ஷிகன்) முதியோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று 26.11.2015 அன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. எம்.எஸ் சில்மியா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதியோர் சுகாதாரம் சம்பந்தமாக வைத்தியர் அபுல்கலாம் அவர்களால் முதியோர்களுக்கு ஏற்படுகின்ற நோய்கள் பற்றியும் அவற்றிலிருந்து நிவாரணம் பெறும் வழிமுறைகள் பற்றியும் வைத்திய அறிவுரைகள் வழங்கப்பட்டன. மற்றும் முதியோர் சங்கங்களின் கணக்குப் பதிதல் தொடர்பாக கணக்காளர் கே.சித்திரா அவர்களால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. மேலும் இந் நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் பலலும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது.