(சுபஜன்)
மட்டக்களப்பு தன்னாமுனை மைலம்பாவெளி பிரதான வீதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (27) அதிகாலை 4.30 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற வேன் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றிற்கு ஒலி பொருக்கி சாதனங்களை ஏற்றிவந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. சாரதியின் துக்கக்கலக்கம் காரணமாக வீதியோரமிருந்த மின் கம்பம் ஒன்றில் மோதுன்டுள்ளது. வேனில் பயணித்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.