மட்-வின்சென்ற் தேசிய பாடசாலையின் கனிஷ்ட பிரிவுக்கான பரிசளிப்பு விழா


(வரதன்)
கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில்  தமிழ்மொழியில் தேசிய ரீதியில் 1ம்இடத்தைப் பெற்றும் மாவட்டத்தில் அதிகூடிய மாணவர்களை சித்திபெற்ற மட் -வின்சென்ற் தேசிய பாடசாலையின் கனிஷ்ட பிரிவுக்கான  மாணவர்களை கௌரவிக்கும்  2015 ஆண்டுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு  பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்கஅமைச்சர் .வீ. இராதாகிருஷ்ணன் அவர்களுடன் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ நிஷாம் மட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மக்கள் வங்கி முகாமையாளர் திருமதி கே. யோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 பாராளமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பிரிசில்களை வழங்கி வைத்து கௌரவித்தனர்