80 விவசாயிகளுக்கு விவசாய கடன் உதவி


(சா.நடனசபேசன்)
மண்டூர் கமநல சேவைகள் நிலையத்தின் கமநல வங்கியினால் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் உதவி  வழங்கும் நிகழ்வு வியாழக் கிழமை மண்டூர் கமநல சேவைகள் நிலையத்தின்  கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.ஜெயக்காந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின்  பிரதி ஆணையாளர் ந.சிவலிங்கம் கலந்து கொண்டார்
இதில் மண்டூர் கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட 80 விவசாயிகளுக்கு  ரூபா 40 இலட்சம் நிதி வழங்கிவைக்கப்பட்டது அதேவேளை வறியமாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நிதியுதவியும் வழங்கிவைக்கப்பட்டது