கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் வாசகர்வட்டம் உருவாக்கம்

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட கடுக்காமுனை வாணி வித்தியாலத்தில் வாசகர்வட்ட குழு அமைக்கப்பட்டு அதற்கான நிருவாக அங்கத்தவர்களும்  இன்று(26) வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டனர்.

மாணவர்களது எழுத்தாற்றல், வாசிப்புநேரத்தை அதிகரித்தல், பாராம்பரிய கலைகள், பண்பாடுகள் பற்றியும், கலைஞர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள், முதியவர்கள் போன்றவர்களின் அனுபவ பகிர்வுகளையும் ஏற்படுத்திக்கொள்வதற்கும், சிரமதானம், விழிப்புணர்வு போன்ற சமூகப்பணிகளை மேற்கொள்வதற்கும், மாணவர்களிடையே விவாதம், கட்டுரை, கவிதை, சிறுகதை, சித்திரம், நாடகம், கூத்து போன்ற பல்வேறான போட்டிகளை நடாத்துவதையும் நோக்காக கொண்டு வாசகர் வட்டம் அமைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்ட பண்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட வாசகர்வட்டத்தின் நன்மையும், தற்காலதேவையும், எதிர்காலமுன்னெடுப்பும் குறித்து மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் மாணவர்களுக்கு விளக்கமளித்ததுடன், இதன்போது பாடசாலையின் பிரதி அதிபர்.த.ரவிராஜா அவர்களும் கலந்து கொண்டார்.