மட்டு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

(க.விஜயரெத்தினம்) 
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் "வில்லியம் ஓல்ட் நம்பிக்கை நிதியத்தினால்" 12 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பணவு வழங்கி வைக்கப்பட்டது.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் புதன்கிழமை காலை
9.00மணியளவில் காட்மண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வில்லியம் ஓல்ட் நம்பிக்கை நிதியத்தின் தலைவரும், கிழக்குபல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி பீ.இளங்கோ சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும்  ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய பிரதி பொதுமுகாமையாளருமான வை.கோபிநாத், மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழையமாணவ சங்கத்தலைவர் எஸ்.சசிகரன் பிரதிஅதிபர் இராசதுரை பாஸ்கரன் நம்பிக்கை நிதியத்தின் செயலாளரும், ஆசிரியருமான கு.சுபாகாந்தன் உட்பட ஆசிரியகள் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 இதன்போது தெரிவுசெய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு அதிதிகளால் புலமைபரிசில் கொடுப்பணவுகள் வழங்கிவைக்கப்பட்டது.