வாகரையில் இயற்கை முறையிலான நஞ்சற்ற உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம் திறந்து வைப்பு...


(கோபி) வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமத்தில் மேற்படி விற்பனை நிலையம் பிரதேச செயலாளர் S.R. ராகுலநாயகி மற்றும் வேள்ட் விஷன் முகாமையாளர் வொணி வின்சன் ஆகியோரால் 05.05.2016ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது. 

வேள்ட் விஷன் கொய்கா திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தி வரும் இயற்கை முறை விவசாய திட்டத்தின் கீழ் 600 ற்கு மேற்பட்ட விவசாயிகள் நஞ்சற்ற உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ் உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக வாகரைப் பிரதேசத்தில் இவ் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வாகரைப் பிரதேசத்தில் நஞ்சற்ற மரக்கறி உற்பத்தி தொடர்பாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வும், சிந்தனை மாற்றமும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.