மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு பா.உ வியாழேந்திரன் ஊடாக உதவி

மட்டக்களப்பு மாவட்ட பாராளூமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் முதல் முறையாக சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் களுபானை என்ற இடத்தில் இடம் பெற்ற கொடூர மண்சரிவால் பாதிக்கப்பட்டு 16 உயிர்களை காவு கொண்ட இடத்திற்கு சென்று அம்மக்களின் குறைகளை கேட்டறிந்ததோடு பாடசாலை மாணவர்களுக்கான உபரணங்களையும் வளங்கி வைத்தார் இவற்றோடு ஏனைய டெனிஸ்வத்த ,வுலக்கோபட்டிய ,தும்பாக போன்ற இடங்களில் பாதிக்கப்பட்ட தமிழ்,சிங்கள,முஸ்லிம் மாணவர்களுக்கும் தனது உதவிகளை வளங்கினார்.