காலவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்தகர்களுக்கு தண்டம்

(ஷமி.மண்டூர்)  சம்மாந்துறை சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர்.சபீர் அவர்களின் வழிகாட்டலில் பொது சுகாதார பரிசோதகர்களால் கடந்த 26 செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்திய போது பல மனித சுகநலத்திற்கு கேடான காலவதியான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பத்து  வர்தகர்களுக்கு எதிராக வைத்திய அதிகாரி அலுவலகத்தினால்; (27) புதன்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் (29) வெள்ளிக்கிழமை தலா 5ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்தும்படி சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.