(ஷமி.மண்டூர்) மட்டக்களப்பு வெல்லாவெளிப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை கிராமத்தில் கடந்த (23) சனி அன்று பச்சிளங்குழந்தை உட்பட ஒரேகுடும்பத்தைச்சேர்ந்த மூவர் கோடரியால் கொத்தி கொலை செய்யப்பட்டவர்களின் இறுதி அஞ்சலி (26) செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது.
அன்னரது இல்லத்தில் நடைபெற்ற சமயக்கிரிகைகளின் பின் ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க அவர்களின் இல்லத்திலிருந்து பலாச்சோலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதி நல்லடக்கத்தின் போது அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் உறவினர் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.