பெரியகல்லாறு தூய செபமாலை மாதா ஆலய 122வது ஆண்டு திருவிழா

[ ரவிப்ரியா ]                
பெரியகல்லாறு தூய செபமாலை மாதா ஆலயத்தின் 122வது ஆண்டு திருவிழா சனி (27) இரவு நடைபெற்ற போது ஆலயத்தின் பங்கு தந்தை அருட்பணி லியோ, வாகரை பங்குத்தந்தை மெருஷன் ஹென்றிக், உதவி பங்கு தந்தை
அருட்பணி செற்றிக் யூட் ஆகியோர் இணைந்து ஆராதனையை மேற்கொண்டனர். தூய சிலுவை, ஆலயத்தைச் சுற்றியும், மாதாவின் திருவுருவம் கிராம வீதிகள் ஊடாகவும் வலம் வந்தது. திருவுருவ பவனியில் அடியார்கள் நூற்றுக் கணக்கில் மெழுகுவாத்தி ஏந்தி கலந்து கொண்டனர்.