விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மனுக்கு பாலாபிஷேகத்திற்கான பாற்குட பவனியும் சங்காபிஷேகமும்!

(எஸ்.சதீஸ்)
 மட்டக்களப்பு நகரின் மேற்கே அமைந்துள்ள விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மனுக்கு பாலாபிஷேகத்திற்கான பாற்குட பவனியும் சங்காபிஷேக நிகழ்வும் செவ்வாய்கிழமை 23ஆம் திகதி இடம்பெற்றது.  

ஸ்ரீ வீரமாகாளியம்மன் தேவஸ்தானத்தில் கடந்த யூலை மாதம்  இந்தியாவிலிருந்து பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட 6 அடி உயரமான கருங்கல்லில் செதுக்கப்பட்ட திருவாசியுடன் கூடிய வீரமாகாளியம்மனுக்கு இதன்போது விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் பாலாபிஷேகம்,சங்காபிஷேகம் போன்றவை பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.