களுவாஞ்சிகுடி ஸ்ரீ யோகஞானபீடத்தில் தனவந்திரி மகாயாகம்


(சித்தா)
'ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்திரியே அமிர்த கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்கிய நாதாய
ஓம் ஸ்ரீ மகா விஸ்ணுவே நமக'

இது தனவந்திரி மகா மந்திரமாகும். மக்கள் நோய் பிணி துன்பங்களோடு அல்லல்படுகின்ற போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்வந்திரியாக அவதாரம் எடுத்து மக்கள் நோய் பிணிகளில் இருந்து விடுபடுவதற்காக உவந்தளித்த மகா மந்தரமாகும்.
இவ் மகா மந்திர யாகம் களுவாஞ்சிகுடி பழந்தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ யோகஞானபீடத்தில் 28.08.2016 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு பக்தர்களினால் தனவந்திரி மகா மந்திரம் பாராயணம் செய்ய மகாயோகி ஆன்மீகக் குரு சி.புண்ணியரெத்தினம் சுவாமி அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.

நாட்டு மக்களினதும், உலக மக்களினதும், நோய், பிணி, துன்பங்கள் நீங்க வேண்டும் என்றும் இனி வரும் காலங்களில் மக்கள் இவ்வாறான துன்பங்களில் இருந்து விடுபட்டு இன்பமுடனும், தரும சிந்தனையுடனும், இறை சிந்தனையுடனும் வாழவேண்டும் என்பதற்காகவும், இவ் மகா யாகம் நிகழ்த்தப்படவுள்ளது.