மட்டக்களப்பு - கரவெட்டி ஶ்ரீ பத்திரகாளி அம்பாளுக்கு கும்பாவிஷேகமும் எண்ணெய் காப்பும்

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு நகரின் மேற்கே இந்து மக்களால் பூர்வீகமாக வழிபட்டு வந்த ஆதிமூல ஆதாராமாய் விளங்கும் கரவெட்டி ஶ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய புனராவர்த்தன சப்புரோக்சண அஷ்டபந்தன பஞ்சகுண்டபஷ மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி விஞ்ஞாபணம்  எதிர்வரும் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கர்மாரம்பம், கிரியைகள் எதிர்வரும் 02ஆம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும்.

தொடர்ந்து அம்பாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும்.

அம்பாளின் மஹா கும்பாபிஷேகம்  எதிர்வரும் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்து.

ஆலயத்திற்கு அனைவரையும் வருகைதந்து ஶ்ரீ பத்திரகாளியம்மன் அருளைப் பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.