வெருகல் சித்ர வேலாயுதர் சுவாமி ஆலய​ ​ மகோற்சவம் ​ சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது



சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும்  வெருகல் சித்ர வேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2016.09.03ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இது தொடர்ந்து 18 தினங்கள் திருவிழா நடைபெற்று 2016.09.21ம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும். மகோற்சவ காலத்தில் அடியவர்கள் ஆலயத்திற்கு வந்த தரிசித்து செல்வதற்கு வசதியாக ஆலய சூழல் பிரதேச மக்களால் சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்படுகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை 2016.08.26 காலை இலங்கைத்துறை முகத்துவாரம். புன்னையடி கிராம மக்கள் ஒன்றிணைந்து இதனை சிரமதானம் செய்தனர்.


ஆலய மகோற்சவத்தில் மட்டக்களப்பு. கல்முனை அம்பாறை பகுதிகளில் இருந்தும் திருகோணமலை மூதூர் கிழக்கு  நகரம்.குச்சவெளி. தம்பலகாமம் பகுதிகளில் இருந்து அடியவர்கள் வந்த செல்வதற்கு வசதியாக இலங்கை போக்குவரத்து சபையினரால் விசேட சேவைகள் காலையும் மாலையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.