பட்டிப்பளையில் சமய, சமூக, கலை, கல்வி கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் நோக்கிலான ஒன்று கூடல்

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் சமய, சமூக, கலை, கல்வி கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் நோக்கிலான ஒன்று கூடல் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(26) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்ணகௌரி தினெஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை கலந்து கொண்டிருந்தார்.

குறித்த ஒன்று கூடலுக்கு மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஆலயங்களின். மன்றங்களின், கிராம அபிவிருத்தி சங்கங்களின், மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேசத்தில் கல்வி, கலை, சமூக, பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் நோக்கிலான குழுவொன்றும் இதன்போது அமைக்கப்பட்டது.