உற்பத்தி திறன் போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு

(படுவான் பாலகன்) வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளைப்பிராந்திய அபிவிருத்தி திட்டத்தினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 21பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட உற்பத்தி திறன் போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கு நினைவுச்சின்னமும் பரிசில்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


இப்போட்டியில் முதலிடத்தினை கற்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும், இரண்டாம் இடத்தினை மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயமும் மூன்றாம் இடத்தினை முதலைக்குடா மகா வித்தியாலயமும், நான்காம் இடத்தினை கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயமும், ஐந்தாம் இடத்தினை கடுக்காமுனை வாணி வித்தியாலயமும் வெற்றுக் கொண்டனர்.

வேள்விஸன் நிறுவன கல்வி இணைப்பாளர் ஆர்.அமுதராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வேள்விஸன் பட்டிப்பளை பிராந்திய நிறுவன முகாமையாளர் இ.மைக்கல், பிரதேச செயலக உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் புவிதரன், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.