கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் விபத்து ஒருவர் காயம்

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலீஸ் பிரிவிற்குட்படட மணல்பிட்டியில் இருந்து மட்டக்களப்புக்கு செல்லுகின்ற   காஞ்சிரங்குடா பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றுடன்  மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்தான சம்பம் இன்று(23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த  இருவர் வீதியில் திரும்பிக்கொண்டிருந்த பேரூந்தின் ஒருபக்கத்தில் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்து  தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.