கருணா அம்மானிற்கு 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைதுசெய்யப்பட்ட கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க வாகன பயன்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக கருணா அம்மான் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று முற்பகல் ஆஜராகினார்.


அவர் பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அரசாங்க வாகனமொன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கருணா அம்மான் அந்த வாகனத்தை மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.