45 மாணவர்களுக்கு வங்கிக்கணக்குப் புத்தகம் வழங்கிவைக்கும் நிகழ்வு


(சா.நடனசபேசன்)
கல்முனை பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற வறியமாணவர்களின் எதிர்கால நலன்கருதி அவர்களின் கல்விக்காக 45 மாணவர்களுக்குப் பணம் வைப்புச்செய்து வங்கிக்கணக்குப் புத்தகம் வழங்கிவைக்கும் நிகழ்வு கல்முனை மாணவர்மீட்புப் பேரவையின் ஏற்பாட்டில் புதன்கிழமை நடைபெற்றது
இதற்கான பணத்தினை சுவிஸ்நாட்டில் இருந்து வருகைதந்த விஜயகுமாரன்  வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் சுவிஸ்நாட்டில் இருந்து வருகைதந்த விஜயகுமாரன்  விவசாயப்போதனாசிரியர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்
இந்நிகழ்வின்போது தமிழ்நாட்டில் உயிரிழந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு  அஞ்சலி  செலுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்