(ஜெ.ஜெய்ஷிகன்)
மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் பௌர்ணமி கலை நிகழ்வுத் தொடரின் 23 வது நிகழ்வாக கவிஞர் ஜீ . எம்.பரஞ்சோதி யின் " நாங்கள் விட்டில்கள் அல்ல " கவிதை நூல் அறிமுகம் எதிர் வரும் பெளர்ணமி தினம் ( 13-12-2016 ) செவ்வாய்க் கிழமைமாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் வட கிழக்கு மாகாண முன்னாள் கலாசார பணிப்பாளர் கலா பூஷணம் செ.எதிர்மன்னசிங்கம் அவர்களின் தலைமையில் நடை பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் திரு. மா.உதய குமார் முன்னிலை வகிக்க
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் பிரதம அதிதியாகவும் தோழர் R. ராஜேந்திரா சிறப்பதிதியாகவும் கலந்து கொள்ளும் இந் நிகழ்வில் வரவேற்புரையை மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் மகுடம் வி.மைக்கல் கொலினும் நூல் வெளியீட்டுரையை பிரபல ஆய்வாளரும் ஊடகவியலாளருமான திருமலை நவமும் நிகழ்த்தவுள்ளனர்.
நூலின் முதற் பிரதியை மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் திரு. S.V . சுவேந்திரன் பெற்றுக் கொள்ள நயவுரையை ஆகவே சஞ்சிகை ஆசிரியரும் கவிஞருமான ஜபாரும்நன்றியுரையை கவிஞர் தில்லை நாதன் பவித்திரனும் ஆற்றுவர்.
இந் நிகழ்வை கவிஞர் கதிரவன் த. இன்பராசா தொகுத்து வழங்கவுள்ளார்.அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.