வாகரை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வு

(வாழைச்சேனை நிருபர்)
 மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்தில் வாழ்வில் சிறந்த தானம் இரத்த தானம் என்ற தொணிப் பொருளில் இன்று புதன் கிழமை (7) இரத்த நன்கொடையாளர்களை இணைத்துக்கொள்வதற்கான செயல் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது

இந் நிகழ்வினை வாகரை பிரதேச செயலாளர் மற்றும் மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவை சங்க கிளையினரும் இணைந்து  முன்னெடுத்தனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி க.விவேக் கலந்து கொண்டு மருத்துவ சேவையினை வழங்கி வைத்தார்.


பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி பிரதேசசபை செயலாளர் சி.இந்திரகுமார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கல்குடா பொறுப்பாளர் அ.கந்தசாமி பிரதேச சபை பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.