நீராட சென்ற பாலகன் பரிதாபமாக மரணம்.

(விஜய் )
வாழைச்சேனை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணையடியில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் இன்று(3) நீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புன்னக்குடா வீதி தளவாய் என்ற இடத்தை சேர்ந்த தயானந்தன்.மிறோஜன் (வயது 12) என்பவரே இவ்வாறு  உயிரிழந்ததாகவும் கிண்ணையடியில் உள்ள உறவினர்களின் வீட்டில் சில காலமாக வசித்து வந்த நிலையில் உறவினரான அதே வயது மதிக்கத்தக்க ஒருவருடன் நீராடச் சென்ற நிலையிலேயே  இச் சம்பவம் நிகழ்ந்ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் தெரியவருவதாவது மாலை கிட்டத்தட்ட 5.30 மணியளில் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் கிராம மக்களின் உதவியுடன் மூழ்கிய சிறுவனின் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்திய சாலைக்கு சடலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலீஸார் மேற்கொணாடுள்ளனர்.