மட்டக்களப்பில் மூடு பனி

மட்டக்களப்பில் கடந்த ஒரு சில நாட்களாக   காலை கடும் மூடு பனி நிலவியது. இதனால், அதிகாலை வேளையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டன. அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச்சென்றதை காணமுடிந்தது.

எதிரே வருபவர்களைக் கூட காண முடியாத அளவுக்கு இனங்காண முடியாத அளவுக்கு பனி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.