பாடசாலை மாணவர்களுக்கான உபகரணம் வழங்கலும், அதிதிகள் கௌரவமும்

(கதிரவன்)

திருகோணமலை அரசடி சனசமுக நிலையத்தினரால்  பாடசாலை மாணவர்களுக்கான  உபகரணம் வழங்கலும், அதிதிகள் கௌரவமும் ஞாயிற்றுக்கிழமை 2017.01.22 நடத்தப்பட்டது.  பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற  நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனன் பிரதம அதிதியாகவும், திருகோணமலை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ச.சுதாகரன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


அரசடி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 30 மாணவர்களுக்கு இவ் உகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அண்மையில் காலபூசம் விருது பெற்ற அசனார், சமூக சேவையாளர் ச.அம்பலவாணர் , ஓய்வு பெற்ற ஆரம்ப கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி பாலேஸ்வரி தர்மராஜா, சனசமுக நிலையத்தின்  தலைவர் த.கௌரிமுகுந்தன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.