மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையில் தரம் ஒன்றிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு


(சிவம்)

மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.

நகர பள்ளிவாசலுக்கருகில் இருந்து ஊர்வலமாக புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் மாலையணிவித்து வரவேற்றனர்.

கல்லூரியின் அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், வாழைச்சேனை சிரேஷ்ட உளநல வைத்திய நிபுணர் யூடி ரமேஷ், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.