ஏறாவூர் இரட்டைக்கொலைச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு.

(சுபஜன்)
ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் 06 பேரினதும்  விளக்கமறியல் எதிர்வரும் 25ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி  முன்னிலையில் இன்று (11) இச்சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியபோதே, இவர்களுக்கான விளக்கமறியலை நீதிபதி நீடித்துள்ளார். 
ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்;டிருந்தன.