ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவாதிரைத் தீர்த்தம்



(சிவம்)
மட்டக்களப்பு; ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஸ்ரீ முத்துமாரியம்மன்   ஆலயத்தில் திருவெண்பாவையின் இறுதிநாளான இன்று புதன்கிழமை (11)  திருவாதிரைத் தீர்த்தம் இடம்பெற்றது.

ஆலய பிரதம குருவின் தீர்த்தக் கிரியைகளின் பின்பு பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு அடியார்கள் சுவாமியை பிரதான வீதி வழியே ஊர்வலமாகச் சென்று ஓந்தாச்சிமடம் கடற்கரையில் தீர்த்தமாடினர்.


தொடர்ந்து ஆலயத்தில் நடராஜப் பெருமானுக்கு பொன்னூஞ்சல் ஆட்டும் நிகழ்வுடன் திருவெண்பாவை  நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.