கடலில் நீராடும் போது மூழ்கிய இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

திருகோணமலை  கடற்கரையில் இன்று (30)   காணாமல் போன இருவரின் சடலங்களும் கரையொதுங்கியுள்ளது

ஒருவரின் சடலம் ஜமாலியா கடற்கரையில் இன்று காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மற்றைய நபரின் சடலம் பள்ளத்தோட்டம் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

நண்பர்கள் 6 பேர் சேர்ந்து கடலில் நீராடுவதற்காக சென்றிருந்த நிலையில் அவர்களில் 3 பேர் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று நீரில் மூழ்கியுள்ளனர்.
மூழ்கியவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டதுடன் மற்றைய இளைஞர்களை தேடும் நடவடிக்கைகள் நேற்று மாலையிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன.
உயிரிழந்தவர்கள் திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த பீ.கேசவன் பிரசாத் (24வயது) மற்றும் துறைராஜா கிரிஷாந்தன் (28 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்