(சிவம்)
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 182 ஆவது பிறந்த தினம் நாளை செவ்வாயக்கிழமை (27) கொண்டாடவுள்ளதை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் படத்தினைத் தாங்கிய ரத ஊர்வலம் இன்று திங்கட்கிழமை (27) மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும்.
கல்லடி இராமகிருஷ்ணமிசனிலிருந்து ஆரம்பமாகும் ஊர்வலம் பிரதான வீதிகள் வழியாக சென்று மீண்டும் குறித்த இடத்தை வந்தடையும்.
இரத ஊர்வலம் செல்லும் வீதிகளில் அடியார்கள் பூரண கும்மம் வைத்து பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரை வரவேற்குமாறு நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
நாளை செவ்வாய்க்கிழமை (28) காலை 5.00 மணி முதல் மங்களாரதி, வேதமந்திரங்கள், திருப்பள்ளியெழுச்சி, பக்திப் பாடல்கள், கொடியேற்றம், பஜனை, பூஜை, ஹோமம், மற்றும் சொற்பொழிவு என்பன இடம்பெறும்.
அதேவேளை குருதேவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஆன்மீக் (சைவம்) நூல்கள் 15 சதவீத சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.