முச்சக்கரவண்டி- மோட்டார் சைக்கிள் விபத்து ! ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி

மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (28) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்களில் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மூதூர் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இந்த விபத்துத் தொடர்பில்; பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.