சாதனைப்பெண் கொக்கட்டிச்சோலை யுவதிகளுடன் அனுபவ பகிர்வு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட யுவதிகளுக்கும் சாதனைப்பெண்ணான ஜயந்தி குரு உத்தம்பொலவிற்கும் இடையிலான இலக்கை நோக்கிய பயணம் அனுபவ பகிர்வு நேற்று(27) திங்கட்கிழமை முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் இடம்பெற்றது.

8848 மீற்றர் (29,029 அடி) உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த 37வயதான முதல் இலங்கையரான ஜயந்தி குரு உத்தம்பொல, மலையின் உச்சியை அடைவதற்கு தான் எதிர்கொண்ட சவால்களையும், நம்பிக்கையையும் இதன் போது யுவதிகளுடன் பகிர்ந்து கொண்டார்.