நீதிமன்ற சாட்சி கூட்டில் பெண்ணொருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

திருகோணமலை கந்தளாய் நீதிமன்ற கூட்டில் மாரடைப்பு காரணமாக பெண்ணொருவர் திடிரென உயிரிழந்துள்ளார். கொழும்பு,மொறட்டுவ,பகுதியைச் சேர்ந்த லமா ஹேவாஹே ஜக்கத் கிரிசாந்த த சில்வா வயது 42 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே நேற்று திங்கட்கிழமை (27) கந்தளாய் நீதிமன்ற சாட்சிக் கூட்டில் நின்ற நிலையிலே திடிரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 சத்தோஸ நிறுவனத்தில் தொழில் புரிந்த பெண்ணே கடந்த 2013 ஆம் ஆண்டில் அரிசி மோசடி சம்பந்தமான வழக்கொன்றில் சாட்சி கூறுவதற்காக நீதிமன்ற கூட்டில் நின்ற நிலையிலே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.