கத்திக்குத்து , தடியடி கைகலப்பு சம்பவம் ! ஆறு பேர் கைது

(கான்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி, கர்பலா காளிகோயில் வீதியில்   கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற கத்திக் குத்துச்  சம்பவம் தொடர்பில் இருபகுதியையும் சேர்ந்த 6 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எஸ்.நிசாந்த தெரிவித்தார்.

ஒரு பகுதியைச் சேர்ந்த ஐவரும் மறுபகுதியைச் சேர்ந்த ஒருவருமாக அறுவர் கைதாகியுள்ளனர்.கைதானவர்கள் நீதமன்றத்தில் ஆஜர் படுத்தபபடவுள்ளனர்.
மேற்படி  மரண வீட்டில் இந்தக் கைகலப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்து மற்றும் தடியடி தாககுதலில் கர்ப்பிணி ஒருவர் உட்பட 2 பெண்களும் 8 ஆண்களுமாக 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒருவர் கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மரணமானரின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம்  காரணமாகவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே  இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்திற்கிடமான மரணமான மூதாட்டியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது