துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ்கலவன் பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அபிவிருத்தி கூட்டம்

(க.விஜயரெத்தினம்)

துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ்கலவன் பாடசாலையின் "பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அபிவிருத்தி" சம்பந்தமான கூட்டம் நேற்று (21.3.2017)  பிற்பகல் 3.30 மணியளவில் அதிபர் கு.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் தொழில் வழிகாட்டல் ஆலோசகரும்,பாடசாலை இணைப்பாளருமான பா.துஸ்யந்திரன்,பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளரும்,ஆசிரியருமான கி.விஜயகுமார்,பிரபல சமாதான நீதவான் முருகேசு- புஸ்கரன்,ஆசிரியை திருமதி சுகிர்தராணி சூரியகுமார்,பழையமாணவன் இ.யுவராஜன்,ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம், உட்பட பெற்றோர்கள்,நலன் விரும்பிகள்,இக்கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தார்கள்.


மௌன இறைவணக்துடன் பாடசாலை அபிருத்திச்சங்க கூட்டம் ஆரம்பமானது.தலைமையுரை,அதிதியுரை,நன்றியுரை என்பன இடம்பெற்றது.

இதன்போது பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் பாரியசிரமதானத்துடன் பாடசாலை வளாகத்தின் துப்பரவு மேற்கொள்ளப்படல்,புலைமைப்பரீட்சை பெறுபேற்றை அதிகரிச் செய்வதற்கு மேலதிக வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல்,ஆரம்ப பாடசாலையாக காணப்படும் இப்பாடசாலையை தரம் உயர்த்துவதற்குரிய பாரிய வேலைத்திட்டதை மேற்கொள்ளல், பெற்றோருக்கும்,பாடசாலைக்கும் இடையே உள்ள உறவை தொடர்ச்சியாக வலுப்படுத்தல் போன்றன பெற்றோர்களினால் தீர்மானிக்கப்பட்டது.