தாழங்குடாக் கிராம சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள்

(சசி)
சித்திரைப் புத்தாண்டை சிறப்பிப்பதுடன், கிராமிய ஒற்றுமை மற்றும் கலாசார அபிவிருத்தியை மேம்படுத்தும் முகமாக ஸீப்ரா விளையாட்டுக் கழகம் நடத்திய சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட விளையாட்டு நிகழ்வுகள் தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழக மைதானத்தில் 2017.04.22 திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

காலை ஆண் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டத்துடன் ஆரம்பமான விளையாட்டு நிகழ்வில் வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், தலையணை அடித்தல், மங்கைக்கு பொட்டு வைத்தல், பெண்களுக்கான தேங்காய் துருவுதல், பெண்களுக்கான கிடுகு இளைத்தல், பெண்களுக்கான தேசிக்காய் ஓட்டம், சிறுவர்களுக்கான மா ஊதி காசு எடுத்தல், சிறுவர்களுக்கான பணிஸ் உண்ணுதல், வினோத உடைப் போட்டி, சங்கீதக் கதிரை, கம்பு சுற்றுதல், நீர் நிரப்புதல், முதியோர்களுக்கான ஓட்டப்போட்டி போன்றன வெகு விமர்சையாக இடம்பெற்றதுடன் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.