விபத்தில் ஒருவர் பலி: சாரதி கைது

திருகோணமலை, ஜமாலியாப் பகுதியில் திங்கட்கிழமை இரவு சைக்கிளும் முச்சக்கரவண்டியொன்றும் மோதியதில்  சைக்கிளில் பயணித்தவர் (வயது 76) உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.



வீதியால் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த  முச்சக்கர வண்டி சைக்கிளுடன் மோதியதாகவும் பொலிஸார் கூறினர். இந்த விபத்தை அடுத்து, முச்சக்கரவண்டிச் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.