ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் சித்திரைப் புத்தாண்டு விழா

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஆரையம்பதி சமுர்த்தி வங்கியினால் " எமது பாரம்பரியத்தைப் பேணுவோம், சிக்கனம் காப்போம்" எனும் கருப் பொருளில் ஆரையம்பதி கிழக்கு நவரட்ணராஜா வித்தியாலய மைதானத்தில் 23-04-2017 இன்று ஞாயிற்றுக் கிழமை வங்கி முகாமையாளர் ந.ஜெயசீலன் தலைமையில் 2017ஆம் ஆண்டுக்கான புது வருட விளையாட்டு விழா நடைபெற்றது.


இவ் விழாவிற்குப் பிரதம விருந்தினராக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், சிறப்பு விருந்தினராக தலைமைக் காரியாலய முகாமையாளர் ஆ.தனேந்திரராஜா, முகாமைத்துவப் பணிப்பாளர் செ.இராசலிங்கம், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கிச் சங்க கட்டுப்பாடுச் சபை உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், ஊர்ப் பெரியார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கப்பட்டன.