மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்த தாய்


ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்கள் பிரசுவித்த சம்பவம் ஒன்று நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

பொத்துவில் தாமரை குளத்தை சேர்ந்த உதயபானு ஐங்கரன் எனும் தாயே இவ்வாறு 4 பிள்ளைகளை பிரசுவித்துள்ளார்

நேற்று அதிகாலை 4 மணியளவில் 3 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் பிரசுவித்துள்ளார்.

ஏற்கனவே இரு ஆண்பிள்ளைகள் இருப்பதாகவும் தற்போது 4 பிள்ளைகள் பிரசுவித்துள்ளதால் தனக்கு பாரிய பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.

இருப்பதற்கு கூட சரியான வசதியின்மையால் தங்களுக்கு உதவி செய்யுமாறு பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.
தகப்பன் - இ. ஐங்கரன்  -‎776412160