கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்



முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ;டிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன் ஒரு நிகழ்வாக இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலிச் சுடரேற்றும் நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் மு. பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அத்துடன் மாணவர் தலைவரின் உரை நிகழ்த்தப்பட்டதுடன். மாணவர்கள் மெழுகுச் தீபத்தைக் கையில் ஏந்திய வண்ணம் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் மெழுகுச் சுடரினை உரிய இடத்தில் ஏற்றி தமது நினைவேந்தலை உளமார அனுஷ்டித்தமையும் குறிப்படத்தக்கது.