கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் உதயபுரம் தமிழ் வித்தியாலய மாணவி மாகாண ரீதியில் முதலாம் இடம்

(இ.சுதாகரன்)

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் கடந்த சனிக்கிழமை செங்கலடி மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக் கிடையிலான தமிழ்தினப் போட்டியில் இரண்டாம் பிரிவு பேச்சுப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவி ஆ.பிதுர்ஷிக்கா மாகாண ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

குறித்த மாணவியினை போட்டிக்கு வழிப்படுத்திய வித்தியாலத்தின் அதிபர் சி.பேரின்பராஜா மற்றும் தமிழ்ப் பாட ஆசிரியை திருமதி எஸ்.சசிகரன் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கு கல்விச் சமூகம் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர்.


குறித்த மாணவி 2016ம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.