பட்டிருப்பில் நடைபெற்ற தேசிய இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணி - வீடியோ

இந்துமத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றினால் திருஞானசம்பந்த சுவாமிகளின் குரு பூசை தினத்தை முன்னிட்டு பிரகடணப்படுத்தப்பட்ட தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு வாரம்  கடந்த சனிக்கிழமை (10.06.2017) தொடக்கம்
நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டிருப்பு சித்தி
விநாயகர் அறநெறிப் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி 11.06.2017 அன்று நடைபெற்றது. பட்டிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பேரணி பட்டிருப்பு, களுவாஞ்சிகுடி பிரதான வீதிகளின் ஊடாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் அறநெறிப் பள்ளி ஆசிரியர்களும், கிராமப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதன்போது மாணவர்களால் அறநெறிக் கொடியும் விற்பனை செய்யப்பட்டது.